டிராக்டரில் பேட்டரி திருட்டு

நெல்லை, டிச.31: நெல்லை அருகே கங்கைகொண்டான் அடுத்துள்ள பருத்திகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் செல்லப்பா(55). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் 29ம் தேதி இரவு கங்கைகொண்டான் பகுதியில் டிராக்டரை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை சென்று பார்த்தபோது டிராக்டரில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரி மாயமாகி இருந்தது. மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும். இதுகுறித்த புகாரின்பேரில் கங்கை கொண்டான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்