டாஸ்மாக் கடைகளில் களைகட்டிய விற்பனை

போச்சம்பள்ளி, செப்.17: இன்று மீலாடி நபியை முன்னிட்டு, அனைத்து அரசு மதுக்கடைகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நேற்று போச்சம்பள்ளி பகுதியில் குடிமகன்கள் பீர் உள்ளிட்ட மதுபானங்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர். டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்றால், சந்து கடைகளில் அன்றைய தினம் குவாட்டர் ஒன்றுக்கு ₹50 முதல் ₹100 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால், போச்சம்பள்ளி, சந்தூர், வேலம்பட்டி, மத்தூர், அரசம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் நேற்று கூட்டம் அலை மோதியது. போட்டி போட்டுக் கொண்டு மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி