ஜெயங்கொண்டம், மார்ச்17: நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள உடனடியாக அமலுக்கு வந்ததையடுத்து, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ள நிலையில், தமிழக முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினை பூட்டி வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். இதே போன்று நகராட்சி, ஒன்றிய, பேரூர் தலைவர்கள் அறைகளுக்கும் சீல் வைக்கும் பணியும், அரசியல் விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றும் பணிகளையும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.