ஜெயங்கொண்டத்தில் ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

 

ஜெயங்கொண்டம், ஆக. 14: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் ரேணுகா. இவரது கணவர் காந்தி(41) இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று ரேணுகா குழந்தைகளுடன் பெற்றோர் வசித்து வரும் ஊரில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கேயே நேற்று முன்தினம் தங்கி விட்டார். இந்நிலையில் நேற்று காலையில் அருகில் உள்ளவர்கள் வீட்டின் கேட் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கும், வீட்டின் உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.

அவர்கள் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த இரண்டு பவுன் செயின், அரை பவுன் தோடு, ரூ. 3 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இவரது வீடு அருகே வசித்து வருபவர் வேல்முருகன் (45). கூலித்தொழிலாளியான இவரும் நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்றுள்ளார். இவரது வீட்டின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கு எதுவும் கிடைக்காததால் ஒரு ெசட் கொலுசை மட்டும் எடுத்து சென்றுள்ளனர். திருட்டு சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்