ஜார்கண்ட்டில் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் வெடித்து சிதறிய மாதிரி ராக்கெட்: 11 மாணவர்கள் காயம்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சோதனை ராக்கெட் வெடித்து சிதறியதால் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள பிரபல கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சியில் மாணவ மாணவிகள் பல்வேறு சோதனைகள் மற்றும் கருவிகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்து கொண்டிருந்தனர். மாதிரி ராக்கெட் ஒன்றை வடிவமைத்திருந்த மாணவ குழு அதனை இயக்கம் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ராக்கெட் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. மாதிரி ராக்கெட் வெடித்ததில் அதனை இயக்கிய மாணவர்கள் இருவர் உள்ளிட்ட 11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 மாணவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாதிரி ராக்கெட் வெடி விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். …

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை