ஜாம்புவானோடை தெற்குகாடு தர்மகோயில் திரவுபதியம்மன் கோயில் தீ மிதி திருவிழா

முத்துப்பேட்டை, ஆக. 5: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தெற்குகாடு கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற தர்மகோயில் திரவுபதியம்மன் கோயில் தீ மிதி திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. முக்கிய நாளன அடுத்த மாதம் 7ம் தேதி தீ மிதி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்று பெருமாள் ஆதினத்தார் வகையறா மண்டகப்படி சார்பில் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து