ஜாதி, மத, அரசியல் மோதல்களை தடுக்க காவல்துறையில் சமூக ஊடக குழுக்கள்; டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

சென்னை: தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: யூடியூப், டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்து, வதந்திகளை பரப்பி அதன் மூலம் குழப்பங்களையும், சண்டைகளையும், கலவரங்களையும், காவல் துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களை கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுபோல இணைய வழியில், பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை, பண மோசடி போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டுபிடிக்கவும் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்காக சென்னை உள்பட 9 மாநகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட ‘சமூக ஊடகக் குழுக்கள்’அமைக்கப்பட்டுள்ளன. கணினிசார் திறன், சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த குழுவில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இக்குழு சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் இயங்கும். பொய்யான பதிவுகளை சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து, அந்த வதந்தி பதிவுகளை நீக்கவும், அவர்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்கவும், கணினிசார் குற்ற வழக்குகளை பதிவு செய்வதற்கு இக்குழு துரிதமாக செயல்படும். இந்த நடவடிக்கை மூலம் ஜாதி, மத, அரசியல் மோதல்களை தடுத்திடவும் இக்குழு உதவும்….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்