சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனை டி.ஆர்.பாலு திறந்து வைப்பு

சென்னை: சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனையை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்துகொண்டார். சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பணிமனையை சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில், எண்.374, அண்ணா சாலை, சைதாப்பேட்டை, சென்னை-15 என்ற முகவரியில் அமைக்கப்பட்டுள்ள சைதைத் தொகுதியின் தலைமைத் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், பகுதி திமுக செயலாளர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, ரா.துரைராஜ், மாவட்ட அவை தலைவர் எஸ்.குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சைதை மா.அன்பரசன், சைதை த.சம்பத் மற்றும் நாடிமுத்து மணிகண்டன், எஸ்.ஏ.அரிகிருஷ்ணன், மின்னல் கந்தப்பன், களக்காடி எல்லப்பன், கோட்டூர் கோ.சண்முகம், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்….

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…