சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

வீரவநல்லூர், ஜன.23: சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை சப்-கலெக்டர் அர்பித் ஜெயின் வெளியிட்டார். சேரன்மகாதேவி கோட்டத்திற்குட்பட்ட அம்பாசமுத்திரம், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உரிய இறுதி வாக்காளர் பட்டியலை சப்-கலெக்டர் அர்பித் ஜெயின் நேற்று வெளியிட்டார். இதையொட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அனைத்து அரசியல் கட்சியினரும் கலந்துகொண்டு இறுதி வாக்காளர் பட்டியலை பெற்றுக்கொண்டனர். இதில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் பகவதிபெருமாள், தாசில்தார்கள் சேரன்மகாதேவி ரமேஷ், அம்பாசமுத்திரம் சுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு