சேதமான மின் மாற்றியை சீரமைக்க வலியுறுத்தல்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகரும்பூர் ஊராட்சியில் அடங்கிய குமரஞ்சேரி கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாய நிலத்திற்கு நடுவே வயல்வெளி பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக உயர் அழுத்த மின் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து சாய்ந்து கிடக்கிறது. இந்த மின் டிரான்ஸ்பார்மர் எந்நேரத்தில் கீழே விழுந்து, அதிகளவு உயிர் சேதங்களை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் இப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். எனவே, சேதமான மின் மாற்றியை அகற்றி புதிய மின் டிரான்ஸ்பார்மர் அமைக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.  …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை