Sunday, October 6, 2024
Home » செல்லப்பிள்ளை திட்டத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறது

செல்லப்பிள்ளை திட்டத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறது

by Karthik Yash

புதுக்கோட்டை, ஜூன்18: செல்லப்பிள்ளை திட்டத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறது என்று புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார். புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில், செல்லப்பிள்ளை திட்டம் குறித்து, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நலம் விசாரித்து சிகிச்சை விபரங்களை கலெக்டர் கேட்டறிந்தார். செல்லப்பிள்ளை பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆலோசனை மையம், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் பிறப்பு சிறப்பு பராமரிப்பு பிரிவு, ஸ்கேன் மையம் ஆகியவற்றின் பணிகளை, கலெக்டர் மெர்சி ரம்யா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் மூலமாக பிரசவித்த தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியம், தாய்ப்பால் கொடுக்கும் முறை, சீம்பாலின் முக்கியத்துவம், பச்சிளம் குழந்தை பராமாரிப்பு, பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவு, சரியான குழந்தை வளர்ப்பு திறனை மேம்படுத்துதல் போன்ற ஆலோசனைகள் அளித்தல் மற்றும் சிகிச்சை பெற்று திரும்பும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு குழந்தைகள் பராமாரிப்பு குறித்து ஆலோசனை அளித்தல் மற்றும் வீடுகள் பார்வை மூலம் தொடர் கவனிப்பு அளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ‘செல்லப்பிள்ளை” எனும் ஆலோசனை மையம் கலெக்டர் தலைமையில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தொடங்கப்பட்டது.

தற்போது வரை 135 வேலை நாட்களில், 4,276 பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களுக்கு செல்லப்பிள்ளை திட்டம் மூலமாக குழந்தை பராமரிப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இங்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்தான இணை உணவு கொழுக்கட்டைகள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளரச்சிப் பணிகள் திட்டம் மூலமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கை மருத்துவர் மரு.இந்திராணி, கண்காணிப்பாளர் (பொ) மரு.ராஜ்மோகன், தாசில்தார் விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

one × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi