செல்போன் திருடிய 17வயது சிறுவன் அதிரடி கைது

ஓசூர், ஜூலை 19: ஓசூர் மாநகராட்சி ராயக்கோட்டை சாலை ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சி(28). இவர் அந்த பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சிறுவன், திடீரென ஆஞ்சியின் செல்போனை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தான். அந்த சிறுவனை அங்கிருந்தவர்களின் உதவியுடன் பிடித்து ஓசூர் டவுன் போலீசில் ஆஞ்சி ஒப்படைத்தார். போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தியபோது, அவர் ஓசூர் ராம்நகரை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு