ஓசூர், ஜூலை 19: ஓசூர் மாநகராட்சி ராயக்கோட்டை சாலை ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சி(28). இவர் அந்த பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சிறுவன், திடீரென ஆஞ்சியின் செல்போனை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தான். அந்த சிறுவனை அங்கிருந்தவர்களின் உதவியுடன் பிடித்து ஓசூர் டவுன் போலீசில் ஆஞ்சி ஒப்படைத்தார். போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தியபோது, அவர் ஓசூர் ராம்நகரை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.