செல்போன் திருடிய சேல்ஸ்மேன் கைது

மதுரை, ஆக. 8: மதுரை, ஆனையூர் கோசாகுளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(37). இவர் தல்லாகுளம் பகுதியில் உள்ள மால் ஒன்றின் செல்போன் விற்பனை நிறுவனத்தில் ஸ்டோர் மேலாளராக இருந்து வருகிறார். இங்கு செல்போன்கள் இருப்பு விபரத்தை அவர் சரி பார்த்தபோது, 2 விலை உயர்ந்த செல்போன்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மணிகண்டன், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது அங்கு விற்பனையாளராக இருந்த சோழவந்தானை சேர்ந்த சுதர்சன்(22) என்பவர் திருடிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து மணிகண்டன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, விற்பனையாளர் சுதர்சனை கைது செய்தனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி