செல்போன் கேட்ட மகனை மிரட்டுவதாக எண்ணி தூக்கு போட்டு கொண்ட தாய் கழுத்து இறுகி பலி

திருச்சி, ஜூன் 6: திருச்சி மேல கண்கண்டார் கோட்டை சஞ்சீவி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன், இவரது மனைவி பழனியம்மாள்(39), இவர்கள் இருவரும் பால் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கல்லுாரி பயிலும் இவர்களது மகன் லெனின் தனது தாயிடம் செல்போன் கேட்டு தொந்தரவு செய்துள்ளார், இதனால் மனமுடைந்த தாய் மகன் கண் முன்னே சேலையால் மின்விசிறியில் துாக்கு மாட்டி கொள்வது போல நடித்து மகனை மிரட்ட நினைத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பழனியம்மாள் சேலை கழுத்தை இறுக்கியது, இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பழனியம்மாளை மீட்டு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை