செல்போனில் சார்ஜ் போட்டு பேசியவர் ஷாக் அடித்து பலி

திருமலை: ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சீதாராமபுரம் அடுத்த முத்தோலி நகரை சேர்ந்தவர் சல்லகல்ல பிரவீன்குமார்(29). இவர் நேற்று முன்தினம் செல்போனில் சார்ஜ் செய்து கொண்டே பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென இடி மின்னல் தாக்கியது. அந்த நேரத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பிரவீன் குமார் சுருண்டு கீழே விழுந்தார். இதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக சீதாராமபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சீதாராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

காஷ்மீரில் 2 இடங்களில் மோதல்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: போலீஸ் ஏட்டு பலி; 6 வீரர்கள் காயம்

டாக்டர்கள் மீது தாக்குதல் எதிரொலி; ஜூனியர் மருத்துவர்கள் மீண்டும் பணி நிறுத்தம்

அக்டோபர் 2ம் தேதி நடக்க உள்ள சிறப்பு கிராம சபைகளில் 20,000 மாணவர் பங்கேற்பு