சென்னையில் வரும் 17, 18ஆம் தேதிகளில் மீண்டும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னையில் வரும் 17, 18ஆம் தேதிகளில் மீண்டும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நவம்பர் 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை தொடரும். திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கரூர், திருச்சி, பெரம்பலூர், புதுச்சேரியில் கனமழை தொடரும்….

Related posts

2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி – மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை

ஆடிப்பூரத் திருவிழா முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 6ம் தேதி உள்ளூர் விடுமுறை

விவசாயிகள் நலன் கருதி நடப்பாண்டிலும் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும்: அமைச்சர் சக்கரபாணி