சென்னை: சென்னை சூளைமேட்டில் பொறியியல் பட்டதாரி பாலகிருஷ்ணன் தற்கொலை வழக்கில் தலைமைச் செயலக ஊழியர் பரமசிவத்தை போலீசார் கைது செய்துள்ளனர். மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த ஆண்டு ரூ.10 லட்சம் பெற்று மோசடி செய்ததாக பாலகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார். பணம் கொடுத்து ஏமாந்த பாலகிருஷ்ணன் கடந்த 10-ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். …