சென்னை: சென்னை அண்ணாநகரில் நேற்றிரவு திமுக நிர்வாகி சம்பத்குமார் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேர் சரணடைந்துள்ளனர். டி.பி.சத்திரத்தை சேர்ந்த ஹரிகுமார், ஸ்ரீதர், மோகனவேல், நவீன்குமார் ஆகியோர் சரண் அடைந்தனர். அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் சரண் அடைந்த 4 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். பொய் புகார் கொடுத்து தன்னையும், தந்தையையும் சிறைக்கு அனுப்பியதால் வெட்டிக் கொன்றதாக ஹரிகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார். சம்பத்குமார் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ரகு உள்ளிட்ட இருவருக்கு போலீஸ் வலைவீசியுள்ளனர்….