சூதாடிய 8 பேர் கைது

 

திருச்சி, மே 30: திருச்சியில் சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி காந்திமார்க்கெட் வடக்கு தாராநல்லூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த மருதமுத்து(40), குமார்(62), அமீர்ஜான்(52), இப்ராகிம்ஷா(52), ரவி(46), ராமசாமி(46), ரத்தினம்(59), பாலு(57) ஆகிய 8 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.3,200ஐ பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை