சூதாடிய 4 பேர் கைது

ஊத்தங்கரை, மே 4: கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை போலீசார், பெருமாள் மலையடிவார பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல்(35), சங்கர்(52), வெங்கட்ராமன், தங்கவேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு