ஊத்தங்கரை, மே 4: கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை போலீசார், பெருமாள் மலையடிவார பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல்(35), சங்கர்(52), வெங்கட்ராமன், தங்கவேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
சூதாடிய 4 பேர் கைது
previous post