கிருஷ்ணகிரி, ஜூன் 14: ராயக்கோட்டை காவல்நிலைய பயிற்சி எஸ்ஐ சரசு மற்றும் போலீசார், பழையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள புளியந்தோப்பு பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்கள், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களில், அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள்(32), முனிராஜ்(28), முரளி(29) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் சீட்டுக்கட்டு கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சூதாடிய 3 பேர் கைது
previous post