சுரண்டையில் நேரு பிறந்த நாள் விழா பழனி நாடார் எம்எல்ஏ, சேர்மன் வள்ளி முருகன் பங்கேற்பு

சுரண்டை,நவ.15: சுரண்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாள் விழா நடந்தது. அலங்கரித்து வைக்கப்பட்ட நேருவின் உருவப்படத்திற்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மற்றும் சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவி வழங்கினர். விழாவில் கவுன்சிலர் அமுதா சந்திரன், அண்ணாத்துரை, நாட்டான்மை ராம்ராஜ், அருணாசலம், பிரபாகரன், கஸ்பா செல்வம், துரை, கந்தையா, பாலகனேஷ் சங்கர், சௌந்தர், ஆனந்த், ஆட்டோ செல்வராஜ், அரவிந்த், பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை