சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு நாளை விடுமுறை

திருச்சி,ஆக.14: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15 அன்று மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் ஹோட்டல் பார்களில் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது