சுசீந்திரம் அருகே பரிதாபம் மகன்கள் கவனிக்காததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை

சுசீந்திரம் :  குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மணிக்கட்டிபொட்டல் அடுத்த சியோன்புரத்தை சேர்ந்தவர் செல்வ ஜெயசிங்(68). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தங்கம் (65). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணம் ஆகி விட்டது. அவர் தனியாக வசித்து வருகிறார். தம்பதியர் 2வது மகனுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் செல்வ ஜெயசிங் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு அவர், அதே ஊரில் வசிக்கும் தனது தம்பி ஞானசீலனுக்கு போன் செய்து மகன்கள் எங்களை சரியாக கவனிக்கவில்லை. எனவே நாங்கள் 2 பேரும் தீக்குளித்து தற்கொலை செய்து ெகாள்ள போகிறோம் என கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஞானசீலன் உடனடியாக செல்வ ஜெயசிங் வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது செல்வ ஜெயசிங், தங்கம் ஆகியோர் தீக்குளித்து  உடல் கருகிய நிலையில் கிடந்தனர். அவர் உடனடியாக இருவரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், தம்பதியர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்