சுசீந்திரம், அக். 25: சுசீந்திரம் அருகே ஆண்டார்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராசையா (68). கூலித் தொழிலாளி. கடந்த 5 வருடமாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவரது மனைவி மேரிலதா மகளுடன் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த போது ராசையாவை காணவில்லை. உள்ளே சென்று பார்த்த போது குளியலறையில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து அவரது மனைவி மேரிலதா சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.