சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் ஊராட்சியில் வசிப்பவர் சுந்தரவதனம் மகள் பரணி. இவர் ஊழியக்காரன் தோப்பு நகராட்சி தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் வீட்டுக்குள் மழைநீர் புகுந்ததால் வீட்டில் இருந்த பள்ளி புத்தகங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது. நனைந்த அந்த புத்தகங்களை மாணவி, வீட்டின் முன்பு சாலையில் வைத்து வெயிலில் காய வைத்தார். சேதமடைந்த புத்தகத்திற்கு பதிலாக புதிய புத்தகம் வழங்க வேண்டும் என மாணவி கோரிக்கை வைத்தார். இதே போல் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழையால் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் ஏராளமான மாணவ, மாணவிகளின் பாட புத்தகங்கள் சேதமடைந்துள்ளன. உரிய கணக்கெடுப்பு நடத்தி மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த புத்தகத்திற்கு பதிலாக புதிய புத்தகங்கள் வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….