சிவகிரி அருகே தந்தை கண்டித்ததால் விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவி பரிதாப சாவு

சிவகிரி,நவ.21: சிவகிரி அருகே தந்தை கண்டித்ததால் விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி நெல்லை அரசு மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார். சிவகிரி அருகேயுள்ள துரைசாமிபுரம் புது காலனியை சேர்ந்த தொழிலாளி திருப்பூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இவரது 15 வயதான மகள் தென்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் ஊருக்கு வந்த மாணவியின் தந்தையான தொழிலாளி, தனது மகள் சரியாக படிக்காமல் இருப்பதை கண்டித்துள்ளார். அத்துடன் இனி நன்றாக படிக்க வேண்டும், வீட்டில் உள்ள சிறு, சிறு வேலைகளை பார்க்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். அதன் பிறகு அவர் திருப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார். இவ்வாறு தந்தை கண்டித்ததால் மன வேதனை அடைந்த மாணவி நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். பின்னர் இதுகுறித்த தெரியவந்ததும் பதறிய அவரது தாய் மற்றும் உறவினர்கள் மாணவியை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை