சிவகாசி, ஏப். 12: சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் மற்றும் உதவித்தொகை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சந்திரசேகரன், தாசில்தார் லோகநாதன் முன்னிலை வகித்தனர். தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகைக்கான ஆணைகளை ேகாட்டாட்சியர் விஸ்வநாதன் வழங்கினார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர். கோட்டாட்சியர் விஸ்வநாதன் கூறுகையில், சிவகாசி வட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை,
மாற்று திறனாளிகள் உதவித்தொகை என 13 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் மட்டும் 1900 பேர் உதவி தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர் என்றார். நேர்முக உதவியாளர் ஆனந்தராஜ், தனி தாசில்தார் சாந்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.