சிவகாசி, செப்.5: சிவகாசி அருகே காலண்டர் கம்பெனி உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி அருகே சித்துராஜபுரம் கிரகத்தாயம்மாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ்(56). இவர் சாமிபுரம்காலனியில் தனியாக காலண்டர் கம்பெனி வைத்து நடத்தி வந்துள்ளார். மன அழுத்தம் காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்து வந்த நிலையில் காலண்டர் கம்பெனியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் செல்வராஜ் மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.