சிறை கைதி மரணம்

திருவொற்றியூர்: சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாபு (எ) அறுப்பு பாபு (36) என்பவரை, கடந்த 2021ம் ஆண்டு மீனம்பாக்கம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவருக்கு காசநோய் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், கடந்த அக்டோபர் மாதம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை