சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

 

கோவை ஆக 28: கோவை ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (55). இவரது உறவினர் பேரூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021 ஜனவரி மாதம் 15ம் தேதி பேரூர் பகுதியில் வசித்து வரும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த ஒரு 7 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியிடம் இது குறித்து வெளியே கூறக்கூடாது என்று மிரட்டினார். இதனால் அந்த சிறுமி பயத்தில் யாரிடமும் கூறவில்லை. சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தாயார், அந்த சிறுமியை அழைத்து விசாரித்தார்.

அப்போது சிறுமி தனக்கு நடந்த சம்பவம் குறித்து சிறுமி அழுது கொண்டே தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்தோணியை கைது செய்தனர். இது குறித்த வழக்கு கோவை போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், தொழிலாளி அந்தோணிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்