செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவரது தந்தை இறந்துவிட்டார். தாய், வெளிநாட்டில் கூலி வேலை செய்கிறார். எனவே, பாட்டியின் பராமரிப்பில் சிறுமி இருந்து வருகிறார். கடந்த 13ம் தேதி, 100 நாள் வேலைக்கு பாட்டி சென்றபோது சிறுமியையும் அழைத்து சென்றார். அப்போது, அங்கு வந்த விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவன், சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிந்து, மாணவனை கைது செய்து விசாரிக்கின்றனர்….