சிறுமியிடம் அத்துமீறல் வாலிபர் மீது போக்சோ வழக்கு

நெல்லை, ஜூன்6: நெல்லை அருகே சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் மீது போலீசார் ேபாக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ராமன் மகன் முத்து(23). கூலித்தொழிலாளி. இவர் 16 வயதுள்ள ஒரு சிறுமியை காதலித்து வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தாயாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து வாலிபர் முத்து மீது போக்சோ வழக்கு பதிவு செய்து எஸ்ஐ முகிலா விசாரித்து வருகிறார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை