சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

 

தர்மபுரி, பிப்.2: தர்மபுரி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொக்லைன் ஆபரேட்டருக்கு, 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, தர்மபுரி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், கோட்டப்பட்டி அருகே டி.அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மயில் (எ)சதீஷ்(25). பொக்லைன் ஆபரேட்டர். இவர் கடந்த 2017 நவம்பர் 20ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த 16வயது சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கோட்டப்பட்டி போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சதீசை கைது செய்தனர். இந்த வழக்கு, தர்மபுரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ைசயத் பர்கத்துல்லா, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சதீசுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ₹18 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை