சிறுபாலை நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை

இளையான்குடி, ஜூன் 21: இளையான்குடி-சாலைக்கிராமம் சாலையில் உள்ள சிறுபாலை கிராமத்தில் உள்ள நிழற்குடை கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், நிழற்குடையின் உள்ளே செல்ல அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, இந்த நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சிறுபாலை ராஜா கூறியதாவது, மழை மற்றும் வெயிலுக்கு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, புதிய நிழற்குடை அமைக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை