சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

கரூர், ஜூலை 4: கரூரில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி, உச்சநீதிமன்ற வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் வரும் ஜூலை 29ம்தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.இந்த நிகழ்வில், பார் அசோசியேஷன், வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் கரூர் நகர காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சொர்ண குமார் செய்திருந்தார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை