சிமெண்ட் சாலை அமைக்க பூமிபூஜை

காவேரிப்பட்டணம், பிப்.8: காவேரிப்பட்டணம் ஒன்றியம், வரட்டம்பட்டி பூநகர் கிராமத்தில் 2023-24ம் ஆண்டு பொது நிதியிலிருந்து ₹7.50 லட்சம் மதிப்பீட்டில், சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் முன்னிலை வைகித்தார். நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா கேசவன், நகர செயலாளர் விமல், ஒன்றிய துணை செயலாளர் விக்ரம் குமார், மோகன், ஆறுமுகம், லோகமணி வெங்கடேசன், மதிவாணன், முனிராஜ், கணேசன், முருகன், கெளரன், பாலமுருகன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை