சின்னாளபட்டி 7வது வார்டில் தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை

சின்னாளபட்டி : சின்னாளபட்டி பேரூராட்சி 7வது வார்டில் கேஎம்எஸ் தெரு, கமலா நேரு கூட்டுறவு சங்கம் தெரு ஆகிய தெருக்கள் உள்ளன. இப்பகுதிக்கு வரும் தெருவில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து கடந்த 8 மாதங்களாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மககள், கூட்டுறவு சங்கத்திற்கு வரும் கைத்தறி நெசவாளர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தில் வருவோர் வாகனங்களை வீட்டிற்கு கொண்டு வர முடியாமல் அருகிலுள்ள திறந்தவெளி இடத்தில் நிறுத்தி விட்டு வரவேண்டிய நிலையில் உள்ளனர். மேலும், தரைப்பாலம் இடிந்து இருப்பதால் மழை பெய்தால் சாக்கடை நிரம்பி வீட்டிற்குள் புகுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் தரைப்பாலத்தை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை

மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்