சின்னத்திரை நடிகையின் பைக் திருட்டு: சிசிடிவி பதிவு மூலம் போலீஸ் விசாரணை

சென்னை: சின்னத்திரை நடிகை ஒருவரின் விலை உயர்ந்த பைக்கை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அசோக் நகர் 5வது அவென்யூ பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை. சின்னத்திரை நடிகையான இவர், தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் முகமது உசேன், 2 ஆண்டுகளுக்கு முன்பு விலையுயர்ந்த பைக் ஒன்றை மணிமேகலைக்கு பரிசாக அளித்துள்ளார். அதன் பிறகு சொகுசு கார் வாங்கியதால் அந்த பைக்கை, மணிமேகலை அசோக் நகரில் உள்ள தனது உறவினரான அரவிந்த் என்பவரின் வீட்டில் நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நடிகையின் பைக்கை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சின்னத்திரை நடிகை மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பைக்குடன் அமர்ந்து இருக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டு வேதனை தெரிவித்துள்ளார். மேலும், பைக் திருட்டு குறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார், சிசிடிவி பதிவுகளை பெற்று பைக் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை