சினிமா ஷூட்டிங்கின் போது பாலிவுட் நடிகர் போக்குவரத்து விதிமீறல்: போலீசார் நடவடிக்கை

கான்பூர்: சினிமா ஷூட்டிங்கின் போது உத்தரபிரதேசத்தில் போக்குவரத்து விதிமீறில் சென்ற பாலிவுட் நடிகருக்கு அபராத சலானை போலீசார் அனுப்பி உள்ளனர்.  உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தனது அடுத்த படமான ‘பவால்’ படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் வருண் தவான் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கான்பூரின் ஆனந்த் பாக் பகுதியில் மக்கள் நெருக்கமான இடத்தில் சினிமா ஷூட்டிங் எடுக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பு வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அந்த வீடியோக்களில், அவர் ஹெல்மெட் அணிந்து பைக்கில் செல்கிறார். கருப்பு நிற பேன்ட், ஷூ மற்றும் கூல் சன்கிளாஸ்ஸுடன் நீல நிற சட்டை அணிந்து செல்வதை காணமுடிகிறது. இந்நிலையில் அவர் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டிச் சென்றதால், வருண் தவானுக்கு உத்தரபிரதேச போலீசார் அபராத சலான் அனுப்பி உள்ளனர். மேலும், அந்த நோட்டீசில் பைக்கின் நம்பர் பிளேட்டில் விதிகளை மீறி எண்கள் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்றுமொரு அபராத சலான் வழங்கப்படும் என்று போலீஸ் அனுப்பிய சலானில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு