சித்ரா பவுர்ணமியையொட்டி கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு இன்று தீர்த்தவாரி

நெல்லை, மே 5: நெல்லையப்பர் கோயில் சுவாமி, அம்பாள் சித்ரா பவுர்ணமி தீர்த்தவாரி வைபவம் சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபம் தாமிரபரணி தீர்த்த கட்டத்தில் இன்று நண்பகல் நடக்கிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திர தேவி மற்றும் பரிவார மூர்த்திகளுடன் இன்று (5ம் தேதி) நண்பகல் 12.30 மணிக்கு நெல்லையப்பர் கோயிலில் இருந்து புறப்பட்டு எஸ்.என் ஹைரோடு வழியாக கைலாசபுரம் தைப்பூச மண்டத்தில் தாமிரபரணி நதிக்கரையை சென்றடைந்ததும் தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது. இதையொட்டி சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதைத்தொடர்ந்து சுவாமி- அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் வீதியுலாவாக டவுன் நெல்லையப்பர் கோயிலை மீண்டும் வந்தடையும் வைபவம் நடக்கிறது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை