சித்திரை மாதத்தையொட்டி தொண்டப்பாடி மாரியம்மன் வீதிஉலா

பாடாலூர், மே 5: பாடாலூர் அருகே சித்திரை மாதத்தை கிராமத்தில் மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா நடந்தது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தொண்டப்பாடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் சித்திரை மாதத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு தேங்காய், வாழைப்பழம் போன்ற அபிஷேக பொருட்கள் வைத்து அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தொண்டப்பாடி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை