மதுரை, மே 6: சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரை ஆர்.ஜெ.தமிழ்மணி டிரஸ்ட் சார்பில், செல்லூர் வைகை வடகரை ரோட்டில், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். இந்த அமைப்பின் தலைவர் ஜெயந்தி ராஜூ தலைமை வகித்தார். இதில், நிர்வாகிகள் கணேஷ்பிரபு, ரம்யாகணேஷ்பிரபு, விஷ்ணுசாகர், வருண் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.