சித்தார்த், அதிதி காதல் உறுதியானது

சென்னை: பொன்னியின் செல்வன் பட விழாவுக்கு ஒரே காரில் வந்த சித்தார்த், அதிதி ராவ் காதல் உறுதியாகியுள்ளது.நடிகர் சித்தார்த், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை விவாகரத்து செய்தார். அதன் பிறகு ஸ்ருதிஹாசனுடன் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்து வந்தார். அந்த உறவும் முறிந்தது. அதையடுத்து சமந்தாவை காதலித்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமந்தாவை பிரிந்தார். இந்நிலையில் மகாசமுத்திரம் என்ற படத்தில் சித்தார்த் நடித்தார். இதில் அவருடன் நடித்த அதிதி ராவ் ஹைதரியை காதலித்தார். அதிதி ராவும் அவரும் ஒன்றாக வாழ்வதாக தகவல் பரவியது. இந்தி நடிகையான அதிதி ராவ், தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்தார். கடைசியாக ஹே சினாமிகா படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்தார். இந்நிலையில் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவுக்கு சித்தார்த்தும் அதிதி ராவும் ஒரே காரில் ஜோடியாக வந்து இறங்கினர். இதையடுத்து இவர்களின் காதல் கதைகள் நிஜமாகிவிட்டதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை