Sunday, September 22, 2024
Home » சிதம்பரம் அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் பரிதாப பலி

சிதம்பரம் அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் பரிதாப பலி

by kannappan

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பைக் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடஹரி ராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் மகன் புருஷோத்தமன் (38), கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய தங்கை புனிதா (35). இவரை குறிஞ்சிப்பாடி ஆடுர் கண்ணாடி, வாணியர் தெருவை சேர்ந்த சரவணனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். புனிதா ஆசிரியர் படிப்பு படித்து முடித்துவிட்டு இன்று சென்னையில் வேலைக்கு சேர இருந்தார். இதற்காக நேற்றிரவு புவனகிரியில் இருந்து சிதம்பரம் நோக்கி டூவீலரில் இருவரும் சென்று கொண்டிருந்தனர். சிலுவைபுரம் அருகே வரும்போது, சிதம்பரத்திலிருந்து புவனகிரி நோக்கி வந்த கார் இரு சக்கர வாக வாகனத்தின் மீது பலமாக மோதிவிட்டு அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த புருஷோத்தமன், காரை ஓட்டி வந்த டிரைவர் அசோக் குமார் (30) ஆகியோர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காரில் பயணித்த வட கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சரவணன் மகன் குகன், மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த புனிதா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரம் தாலுகா போலீசார், படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக ராஜ முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

You may also like

Leave a Comment

2 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi