சிங்கம்புணரியில் ஒன்றிய குழு கூட்டம்

 

சிங்கம்புணரி, ஜூலை 28: சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் சாதாரண ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு தலைமை வகித்தார். ஆணையாளர் ராஜேந்திரகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜு முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் செலவினங்கள் உள்ளிட்ட 29 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதில் திமுக ஒன்றிய கவுன்சிலர் உதயசூரியன் பேசும்போது, எஸ்.எஸ்.கோட்டை, கோழிக்குட்டி பகுதிகளில் சேதமடைந்த மின் கம்பங்களை மின்வாரியத் துறையினர் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒன்றிய குழு கூட்டத் தீர்மானங்கள் குறித்து முன்கூட்டியே ஒன்றிய குழு கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பேசினார். இக்கூட்டத்திற்கு துணைத் தலைவர் சரண்யா, கவுன்சிலர்கள் உமா, சத்தியமூர்த்தி, உதயசூரியன், பெரியகருப்பி, இளங்குமார், சசிக்குமார் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பிற துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து