சாலை வளைவில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில் 5 பெண்கள் படுகாயம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கிழ்முதலம்பேடு பகுதியில் ஷேர் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்ததில் 5  பெண்கள் படுகாயமடைந்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த கிழ்முதலம்பேடு ஊராட்சி சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒடிசா, பீகார், ஜார்கண்ட், டெல்லி மற்றும் கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, செங்குன்றம், சென்னை, ஆரம்பாக்கம்  பகுதிகளில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம்.  இந்நிலையில் புதுவாயில் இருந்து சென்னை நோக்கி வந்த ஷேர்ஆட்டோ 5 பெண்களை ஏற்றிக்கொண்டு கிழ்முதலம்பேடு ஊராட்சி வந்து கொண்டிருந்தது. அப்போது மேம்பாலம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திருப்பும் முனையில் திடீரென ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் 5 பெண்கள் காயமடைந்தனர். அவர்களை சக வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். …

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

தசரா விழாவை ஒட்டி இன்று முதல் 16ஆம் தேதி வரை சென்னை மற்றும் கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி!