சாலையை சீரமைக்க கோரி தர்ணா

ராஜபாளையம், ஜூன் 27: ராஜபாளையம் வழியாக செல்லும் திருமங்கலம் செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. சாலையை புதுப்பிக்கும் பணியை தாமதமின்றி உடனே துவங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராஜபாளையம் திருவில்லிபுத்தூர் பகுதியில் எட்டு இடங்களில் தர்ணா நடைபெற்றது.

ராஜபாளையம் நகரில் நகரச்செயலாளர் விஜயன் தலைமை வகித்தார். போராட்டத்தை மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ரவி துவக்கி வைத்து பேசினார். தர்ணாவில் மாவட்ட குழு உறுப்பினர்கள் முருகன், வேலுச்சாமி மற்றும் காளிமுத்து, பாஸ்கர் வெள்ளைச்சாமி, சித்திரைக்கனி பாப்பையா, பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை