சாலையை கடந்தபோது விபத்தில் வாலிபர் பலி

சேலம், ஜூன் 23: கர்நாடக மாநிலம் பெங்களூரூவை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் தீட்சித்குமார்(28). நேற்றுமுன்தினம் சேலம் வந்த இவர், கருப்பூர் சாமிநாயக்கன்பட்டியில் உள்ள லிங்கபைரவர் கோயிலுக்கு சென்றார். பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டு விட்டு இரவு 8மணியளவில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி அருகே சாலையை கடந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட தீட்சித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கருப்பூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை